சிவவாக்கியம் | SivaVaakkiyam | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. சிவவாக்கியம் > காப்பு > பாடல்: 0 | |
| 1 | கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. சிவவாக்கியம் > காப்பு > பாடல்: 1 | |
| 2 | ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. சிவவாக்கியம் > அக்ஷர நிலை > பாடல்: 2 | |
| 3 | ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. சிவவாக்கியம் > சரியை விலக்கல் > பாடல்: 3 | |
| 4 | உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 4 | |
| 5 | வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே. சிவவாக்கியம் > தேகநிலை > பாடல்: 5 | |
| 6 | என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 6 | |
| 7 | நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ? அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 7 | |
| 8 | மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ; எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ; கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ- நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய். சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 8 | |
| 9 | அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம் கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம் பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின் துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 9 | |
| 10 | அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 10 | How fast we cling to stock of cattle and riches gay Less stable even than the boat which midstream upturns! They but see the dissolving body and know not The Binding Knot to salvation eternal. |