இருபாஃ இருபது | Irubaa Irubathu |
மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அன்னியம் ஆக்கி அருள்வழி அதனால்
என்னுள் புகுந்தனை எனினே முன்னைத்
திரிமலம் தீர்த்த தேசிக! நின்னோடு
உருவுதல் இன்றி உடந்தையே ஆகும்
பெருநிலை ஆகல் வேண்டும் மருவிடும்
மும்மலம் அதனால் எம்முள் நின்றிலை எனில்
அம்மலத் திரிவும் செம்மலர்த் தாள்நிழல்
சேர்தலும் இலவாய்ச் சார்பவை பற்றிப்
பெயர்வு இலன் ஆகும், பெரும! தீர்வு இன்று
அமைந்த கருமத்து இயைந்ததை அல்லது
சமைந்தன இலஎனச் சாற்றில் அமைந்த
மாயேயம் கன்மம் மாமலம் மூன்றும்
மாயாது ஆகவே ஆர்ச்சன மாயையின்
உற்பவம் தீராது ஒழுகும் ஒன்று ஒன்று
நிற்சமம் ஆயின் அல்லது நிற்பெறல்
இல்லென மொழிந்த தொல் அறம் தனக்கும்
ஏயாது ஆகும் நாயேன் உளத்து
நின்றனை என்பனோ நின்றிலை என்பனோ
பொன்றிய பொன்றிற்றில மலம் என்பனோ
ஒன்றினை உரைத்து அருள் மன்ற குன்றாப்
பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க்கு அதிபதி!
கைகண் தலைவாய் கால்செவி மூக்கு உயர்
மெய்கொண்டு என்வினை வேர் அறப் பறித்த
மெய்கண்ட தேவ! வினையிலி!
மைகொண்ட கண்ட! வழுவிலென் மதியே!
இருபாஃ இருபது > பாடல்: 10
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக