திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஊமன் கண் போல ஒளியும் மிக இருளேயாம் மன்கண் காணாத அவை. | ஊமன்கண் போல வொளியு மிகவிருளே யாம்மன்கண் காணாத வை. |
| பொருள் : கூகையின் கண் பகலில் சூரியவொளியில் கலந்து நின்றாலும் அவ்வொளியை அறியாது இருள் வயப்பட்டிருக்கும். அதுபோல, அநாதியில் உயிர்கள் பேரறிவாகிய திருவருள் ஒளியோடு கூடியிருந்தும் அவ்வொளியை அறியாதனவாய் ஆணவ இருளின் வயப்பட்டு இருளாய் நிற்கும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows