திருவருட்பயன் | Thiruvarutpayan

இன்று வரையிலும் நீங்காது உள்ளது

பதம் பிரித்துஉள்ளபடியே
அன்று அளவி உள் ஒளியோடு ஆவி இடை அடங்கி
இன்று அளவும் நின்றது இருள்.
அன்றளவி யுள்ளொளியோ டாவி யிடையடங்கி
யின்றளவும் நின்ற திருள்.
பொருள் : உயிரிடத்தில் இரண்டறக் கலந்து நிற்கின்ற உள்ளொளியாகிய இறைவனோடு ஆணவமாகிய இருளும் அன்றே உடன் கலந்திருக்கிறது. அந்த இருள் இறைவனுக்குக் கீழ்ப்பட்டதாய் அடங்கி உயிரை மட்டுமே பற்றி நிற்கிறது. அன்று தொட்டு இன்று வரையிலும் உயிரை விட்டு நீங்காமலே உள்ளது.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 24

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026