திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும் இரு பொருளும் காட்டாது இது. | ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டு மிருபொருளுங் காட்டா திது. |
| பொருள் : புற இருள் ஒரு பொருளையும் காண ஒட்டாதபடி நமது கண்ணை மறைத்து விடும். ஆயினும் தன்னைக் காட்டி நிற்கும். அஃதாவது, தான் ஒரு பொருள் உண்டு என்பதை நாம் உணர நிற்கும். அக இருளாகிய இந்த ஆணவ மலம் இறைவன். உயிர் முதலிய பிற பொருள்களையும் அறிய வொட்டாது. தன்னையும் காட்டிக் கொள்ளாது. இவ்வாறு பிற பொருள், தான் என்ற இரண்டையும் நாம் அறிய முடியாத வகையில் நமது அறிவை மறைத்து நிற்கும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows