திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இருள் ஆனது அன்றி இலது எவையும் ஏகப் பொருள் ஆகி நிற்கும் பொருள். | இருளான தன்றி யிலதெவையு மேகப் பொருளாகி நிற்கும் பொருள். |
| பொருள் : உலகத்திலுள்ள பல வகைப்பட்ட பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடியும், அவை யாவும் தானேயாய்த் தோன்றும்படியும், மறைத்து நிற்கும் பொருள் இருளையன்றி வேறில்லை. இந்தப் புற இருளைப் போலப் பதி, பசு, பாசம் ஆகிய அறியத்தக்க பலவகைப் பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடி மறைத்து நிற்பது ஆணவ மலம் ஆகிய அகவிருளாகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows