திருவருட்பயன் | Thiruvarutpayan

ஆணவ மலம் என்பது உண்டு

பதம் பிரித்துஉள்ளபடியே
துன்றும் பவத் துயரும் இன்பும் துணைப் பொருளும்
இன்று என்பது எவ்வாறும் இல்.
துன்றும் பவத்துயரு மின்புந் துணைப்பொருளு
மின்றென்ப தெவ்வாறு மில்.
பொருள் : இடையறாது தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பமும், அது நீங்கிப் பெறுகின்ற பேரின்பமும், உயிர்கள் அதனைப் பெறுதற்குத் துணையாய் நிற்கும் இறைவனாகிய முதற் பொருளும் ஆகியவை இல்லாத பொருள்கள் என்று சொல்<லுவது எவ்வகையிலும் பொருந்தாது. அவ்வாறாகவும், மாந்தர் அவற்றை இல்லையெனக் கருதி வருவதற்குக் காரணம் இருத்தல் வேண்டும். அதுவே ஆணவ மலம்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 21

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 03, 2026