திருவருட்பயன் | Thiruvarutpayan

அருள் பேரொளியாய் நிற்றல்

பதம் பிரித்துஉள்ளபடியே
பெருக்க நுகர்வினை பேர் ஒளியாய் எங்கும்
அருக்கன் என நிற்கும் அருள்.
பெருக்க நுகர்வினை பேரொளியா யெங்கு
மருக்கனென நிற்கு மருள்.
பொருள் : உலக மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டவும், பின் நுகரவும் துணை புரிந்து நிற்கும் சூரியன் பேரொளியாய் எங்கும் பரவி நிற்றல் போல, இறைவனது திருவருட் சத்தி உயிர்கள் நல்வினை தீவினைகளைச் செய்து புண்ணிய பாவங்களை ஈட்டவும் அவற்றின் பயன்களாகிய இன்ப துன்பங்களை நுகரவும் துணை செய்து பேரறிவாய் எங்கும் நிறைந்து நிற்கும்.

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 32

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026