திருவருட்பயன் | Thiruvarutpayan

வெளிவந்து நிற்கின்ற அருள்தலைவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
அறியாமை உள் நின்று அளித்ததே காணும்
குறியாக நீங்காத கோ.
அறியாமை யுள்நின் றளித்ததே காணுங்
குறியாக நீங்காத கோ.
பொருள் : உயிர் பக்குவம் உறாதநிலையில் இறைவன் அவ்வுயிரின் உள்ளாக மறைந்து நின்று அவ்வுயிர் அறியாதபடி அதன் அறிவைச் சிறிது சிறிதாக வளர்த்து வருவான். அவ்வுயிர் உண்மையை உணர்ந்து கொள்ளும் பக்குவம் எய்திய பொழுது அவ்விறைவனே கண்ணால் காணும் வடிவினையுடைய ஞானாசிரியனாய்த் தோன்றி வந்து அப்பக்குவ ஆன்மாவுக்குத் திருவருளைத் தெளிய உணர்த்துவான்.

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 41

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Fri, Jul 24, 2026