திருவருட்பயன் | Thiruvarutpayan

அதுவாய் நிற்றல்

பதம் பிரித்துஉள்ளபடியே
தூ நிழல் அர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இது போல்
தான் அதுவாய் நிற்கும் தரம்.
தூனிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல்
தானதுவாய் நிற்குந் தரம்.
பொருள் : வெயிலில் அலைந்து வருந்தியவன் குளிர்ந்த நிழலை உடைய இடத்தைக் கண்டால் பிறர் சொல்லாதிருக்கவும் தானே அவ்விடத்தை அடைந்து நிழலில் அடங்கி நின்று இன்புறுவான். அதுபோல, அறியும் நெறியால் திருவருளை உணர்ந்த உயிர் தான் வேறாய் நில்லாமல் அத்திருவருளோடு ஒன்றுபட்டு அதனுள் அடங்கி அதுவேயாய் நிற்கும்.

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 61

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026