திருவருட்பயன் | Thiruvarutpayan

கசப்பும் இனிப்பும்

பதம் பிரித்துஉள்ளபடியே
தித்திக்கும் பால் தானும் கைக்குந் திருந்திடும் நாப்
பித்தத்தில் தான் தவிர்ந்த பின்.
தித்திக்கும் பாடானுங் கைக்குந் திருந்திடுநாப்
பித்தத்தி டான்டவிர்ந்த பின்.
பொருள் : பால் தித்திப்பாக இருப்பது அதன் இயற்கை. அந்த இயற்கைக்கு மாறாகப் பால் கசப்பது நாவில் சேர்ந்த பித்தம் என்னும் செயற்கையினால் ஆகும். பித்தமாகிய செயற்கை நீங்கியபோது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல, உயிருக்கு என்றும் உறவுப் பொருளாக இருப்பது திருவருள். அவ்வியல்புக்கு மாறாகத் திருவருள் பகைப் பொருளாக உயிர்க்குத் தோன்றுதல் அவ்வுயிரைப் பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையினால் ஆகும். அச்செயற்கை நீங்கியபோது, திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும்.

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 62

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026