திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தாமே தருபவரைத் தம் வலியினால் கருதல் ஆமே இவன் அர் அதற்கு. | தாமே தருபவரைத் தம்வலியி னாற்கருத லாமே யிவனா ரதற்கு. |
| பொருள் : முதல்வன் தானே தனது கருணையினால் உயிருக்கு ஞானத்தைத் தந்து தன்னை உணர்த்தி நிற்கிறான். அங்ஙனமாக, அம்முதல்வனை உயிர் தானே தன் முயற்சியினால் அடைந்ததாகக் கருதுவது பொருந்துமோ? முதல்வனை இவ்வுயிர் தனது வலிமையால் பெறுவதற்கு என்ன உரிமையுடையது. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows