திருவருட்பயன் | Thiruvarutpayan

கருவிகளும் உயிரறிவும் அறியா

பதம் பிரித்துஉள்ளபடியே
ஐம்புலனால் தாம் கண்டது என்றால் அது ஒழிய
ஐம்புலனார் தாம் ஆர் அதற்கு.
ஐம்புலனாற் றாங்கண்ட தென்றா லதுவொழிய
வைம்புலனார் தாமா ரதற்கு.
பொருள் : உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளைக் கொண்டு அறிந்து வந்ததெல்லாம் மெய்ப் பொருளாகிய சிவம் நீங்கலாக ஏனையவற்றையேயாம். அப்படியிருக்க, முத்திக் காலத்தில் அம்மெய்ப் பொருளை அறிவதற்கு அக்கருவிகள் துணையாதற்கு என்ன உரிமையுடையன? இனி, அக்கருவிகள் இன்றி ஒன்றையும் அறிய மாட்டாத உயிர்களும் தனியாய் நின்று அம்மெய்ப் பொருளை அறிதற்கு என்ன உரிமையுடையன?

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 69

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026