திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று நில்லா வகையை நினைந்து. | எல்லா வகையு மியம்புமிவ னகன்று நில்லா வகையை நினைந்து. |
| பொருள் : ஆன்மா பாசத்தினின்றும் உடனே நீங்க மாட்டாமல் படி முறையிலே சிறிது சிறிதாகவே நீங்கும் இயல்புடையது. அதனைக் கருதியே ஆகமங்கள் திருவைந்தெழுத்தினை ஒருபடியாகக் கூறாமல் இங்ஙனம் படிமுறைக்கு ஏற்பப் பல வகையாக அமைத்துக் கூறுகின்றன. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows