திருவருட்பயன் | Thiruvarutpayan

நிலையால் பலவகைப்படுதல்

பதம் பிரித்துஉள்ளபடியே
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து.
எல்லா வகையு மியம்புமிவ னகன்று
நில்லா வகையை நினைந்து.
பொருள் : ஆன்மா பாசத்தினின்றும் உடனே நீங்க மாட்டாமல் படி முறையிலே சிறிது சிறிதாகவே நீங்கும் இயல்புடையது. அதனைக் கருதியே ஆகமங்கள் திருவைந்தெழுத்தினை ஒருபடியாகக் கூறாமல் இங்ஙனம் படிமுறைக்கு ஏற்பப் பல வகையாக அமைத்துக் கூறுகின்றன.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 90

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026