திருமந்திரம் | Thirumanthiram | #2423

திருமந்திரம் | Thirumanthiram

பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே. 19

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 16. பதி பசு பாசம் வேறின்மை > பாடல்: 2423

Jivas that in Pati-Pasam (Arul Pasam) stand,
Reaches the Para State;
Jivas that in Pasu-Pasam stand,
Are but Pasus (in worldly ways);
As Jivas in Pati-Pasam stand,
Attain Para State,
Jivas in Pati-Pasam continous standing
Verily become Pasu-Pati (Lord of Jivas).
Jivas that in Pati-Pasam (Arul Pasam) stand,
Reaches the Para State;
Jivas that in Pasu-Pasam stand,
Are but Pasus (in worldly ways);
As Jivas in Pati-Pasam stand,
Attain Para State,
Jivas in Pati-Pasam continous standing
Verily become Pasu-Pati (Lord of Jivas).

பசு தன்னைக் கட்டியுள்ள பாசங்கள் குறும்பு செய்தலால், `நானே பரம்` என்கின்றது. ஆயினும், அங்ஙனம் நினைப்பதும், சொல்வதும் என்றும் நிலைத்து நில்லாமல் பின் நீங்கிப் போவதால், உயிர்க்கு அந்நிலை செயற்கை நிலையாதல் விளங்கு தலின், `உயிர் அனாதியே செயற்கையோடு கூடிப் பசுவேயாய் நிற்கின்று? என, அறிந்தோர் கூறுவர். ஆயினும், `பதிதான் முதலிலே பாசத்தோடு கூடிப் பசுவாய் இருந்து பின் பாசத்தினின்றும் நீங்கிப் பதி யாகின்றது` எனச் சிலர் கூற முற்படுவாராயின், அங்ஙனம் கூறு வார்க்குப் பதியின் வேறாய்ப் பசு இல்லையாம் ஆகலானும், பாசங்கள் சடம் ஆகலின் தாமே செயற்படமாட்டா ஆகலானும் பதியே தன்னின் மிக இழிந்த பாசங்களை மேலிட்டுக்கொண்டு பசுவாதல் கூடுமோ?

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jun 29, 2026

திருமந்திரம் | Thirumanthiram

பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே. 19

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 16. பதி பசு பாசம் வேறின்மை > பாடல்: 2423

Jivas that in Pati-Pasam (Arul Pasam) stand,
Reaches the Para State;
Jivas that in Pasu-Pasam stand,
Are but Pasus (in worldly ways);
As Jivas in Pati-Pasam stand,
Attain Para State,
Jivas in Pati-Pasam continous standing
Verily become Pasu-Pati (Lord of Jivas).
Jivas that in Pati-Pasam (Arul Pasam) stand,
Reaches the Para State;
Jivas that in Pasu-Pasam stand,
Are but Pasus (in worldly ways);
As Jivas in Pati-Pasam stand,
Attain Para State,
Jivas in Pati-Pasam continous standing
Verily become Pasu-Pati (Lord of Jivas).

பசு தன்னைக் கட்டியுள்ள பாசங்கள் குறும்பு செய்தலால், `நானே பரம்` என்கின்றது. ஆயினும், அங்ஙனம் நினைப்பதும், சொல்வதும் என்றும் நிலைத்து நில்லாமல் பின் நீங்கிப் போவதால், உயிர்க்கு அந்நிலை செயற்கை நிலையாதல் விளங்கு தலின், `உயிர் அனாதியே செயற்கையோடு கூடிப் பசுவேயாய் நிற்கின்று? என, அறிந்தோர் கூறுவர். ஆயினும், `பதிதான் முதலிலே பாசத்தோடு கூடிப் பசுவாய் இருந்து பின் பாசத்தினின்றும் நீங்கிப் பதி யாகின்றது` எனச் சிலர் கூற முற்படுவாராயின், அங்ஙனம் கூறு வார்க்குப் பதியின் வேறாய்ப் பசு இல்லையாம் ஆகலானும், பாசங்கள் சடம் ஆகலின் தாமே செயற்படமாட்டா ஆகலானும் பதியே தன்னின் மிக இழிந்த பாசங்களை மேலிட்டுக்கொண்டு பசுவாதல் கூடுமோ?

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jun 29, 2026