14. மென்மையும்! வன்மையும்! பாடியவர் :கபிலர். பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன். திணை : பாடாண். துறை : இயன்மொழி கடுங்கண்ண கொல் களிற்றால் காப் புடைய எழு முருக்கிப், பொன் இயல் புனை தோட்டியான் முன்பு துரந்து, சமந் தாங்கவும்; பார்உடைத்த குண்டு அகழி நீர் அழுவம் நிவப்புக் குறித்து, நிமிர் பரிய மா தாங்கவும்; ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்; பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்! வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை, புலவு நாற்றத்த பைந்தடி பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவை கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும் மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்கு ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு இருநிலத்து அன்ன நோன்மை செருமிகு சேஎய் ! நின் பாடுநர் கையே.
புறநானூறு > பாடல்: 14
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக