21. புகழ்சால் தோன்றல்! பாடியவர்: ஐயூர் மூலங்கிழார். பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி. திணை: வாகை. துறை:அரசவாகை. புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்! நிலவரை இறந்த குண்டுகண் அகழி, வான்தோய் வன்ன புரிசை, விசும்பின் மீன்பூத் தன்ன உருவ ஞாயில், கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை, அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, வேங்கை மார்பின் இரங்க வைகலும் ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே! இகழுநர் இசையடு மாயப், புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!
புறநானூறு > பாடல்: 21
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக