250. மனையும் மனைவியும்! பாடியவர்: தாயங் கண்ணியார் திணை: பொதுவியல் துறை: தாபதநிலை குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர் கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க், கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி, அல்லி உணவின் மனைவியடு, இனியே புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்! வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.
புறநானூறு > பாடல்: 250
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக