258. தொடுதல் ஓம்புமதி! பாடியவர்: உலோச்சனார் திணை: வெட்சி துறை: உண்டாட்டு முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத் தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம் நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு, பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப், புலம்புக் கனனே, புல்அணற் காளை, ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும் தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி; ஆதரக் கழுமிய துகளன், காய்தலும் உண்டு, அக் கள்வெய் யோனே.
புறநானூறு > பாடல்: 258
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக