261. கழிகலம் மகடூஉப் போல! பாடியவர்: ஆவூர் மூலங்கிழார் திணை: கரந்தை துறை: கையறு நிலை அந்தோ! எந்தை அடையாப் பேரில்; வண்டுபடு நறவின் தண்டா மண்டையடு வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம், வெற்றுயாற்று அம்பியின் எற்று ? அற்று ஆகக் கண்டனென், மன்ற ; சோர்க, என் கண்ணே; வையங் காவலர் வளம்கெழு திருநகர், மையல் யானை அயாவுயிர்த் தன்ன நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் பயந்தனை, மன்னால், முன்னே! இனியே பல்ஆ தழீஇய கல்லா வல்வில் உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி, நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட, நிரைஇவண் தந்து, நடுகல் ஆகிய வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக், கொய்ம்மழித் தலையடு கைம்மையுறக் கலங்கிய கழிகலம் மகடூஉப் போல புல்என் றனையால், பல்அணி இழந்தே.
புறநானூறு > பாடல்: 261
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக