266. அறிவுகெட நின்ற வறுமை! பாடியவர்: பெருங்குன்றூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் உருவப்ப·றேர் இளஞ்சேட் சென்னி. திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக், கயங்களி முளியும் கோடை ஆயினும், புழற்கால் ஆம்பல் அகலடை நீழல் கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை நாகுஇள வளையடு பகல்மணம் புகூஉம் நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்! வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி! சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், ஆசாகு என்னும் பூசல்போல, வல்லே களைமதி அத்தை- உள்ளிய விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப், பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன் அறிவுகெட நின்ற நல்கூர் மையே!
புறநானூறு > பாடல்: 266
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக