288. மொய்த்தன பருந்தே! பாடியவர்: கழாத்தலையார் திணை: தும்பை துறை: மூதின் முல்லை மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின் அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க, ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து, அருகுகை .. .. .. .. .. .. மன்ற குருதியடு துயல்வரும் மார்பின் முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.
புறநானூறு > பாடல்: 288
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக