287. காண்டிரோ வரவே! பாடியவர்: சாத்தந்தையார் திணை: கரந்தை துறை: நீண்மொழி துடி எறியும் புலைய! எறிகோல் கொள்ளும் இழிசின! கால மாரியின் அம்பு தைப்பினும், வயல் கெண்டையின் வேல் பிறழினும், பொலம்புனை ஓடை அண்ணல் யானை இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும், ஓடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும், தண்ணடை பெறுதல் யாவது? படினே; மாசில் மகளிர் மன்றல் நன்றும், உயர்நிலை உலகத்து, நுகர்ப; அதனால் வம்ப வேந்தன் தானை இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே!
புறநானூறு > பாடல்: 287
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக