43. பிறப்பும் சிறப்பும்! பாடியவர்: தாமப்பல் கண்ணனார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான். திணை : வாகை. துறை: அரசவாகை. குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , 'சோழன் மகன் அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது. நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத், தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக், கால்உண வாகச், சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக! நேரார்க் கடந்த முரண்மிகு திருவின் தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல், கொடுமர மறவர் பெரும! கடுமான் கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்: ‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது நீர்த்தோ நினக்கு?’ என வெறுப்பக் கூறி, நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும், நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே; ‘தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்! இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்’ எனக் காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின், யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்; மிக்குவரும் இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே!
புறநானூறு > பாடல்: 43
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக