70. குளிர்நீரும் குறையாத சோறும் பாடியவர்: கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்). பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை : பாடாண். துறை: பாணாற்றுப்படை. தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண! கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி; வினவல் ஆனா முதுவாய் இரவல! தைத் திங்கள் தண்கயம் போலக், கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர், அடுதீ அல்லது சுடுதீ அறியாது; இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன், கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி, நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும் கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல், இன்னகை விறலியடு மென்மெல இயலிச் செல்வை ஆயின், செல்வை ஆகுவை; விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர், தலைப்பாடு அன்று, அவன் ஈகை; நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!
புறநானூறு > பாடல்: 70
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக