94. சிறுபிள்ளை பெருங்களிறு! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை : வாகை. துறை: அரச வாகை. ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின், நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன் துன்னருங் கடாஅம் போல இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.
புறநானூறு > பாடல்: 94
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக