99 அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், நீர்அக இருக்கை ஆழி சூட்டிய தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல, ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல், பூவார் காவின், புனிற்றுப் புலால் நெடுவேல், எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம் வழுவின்று எய்தியும் அமையாய், செருவேட்டு, இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச் சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் பரணன் பாடினன் மற்கொல், மற்று நீ முரண் மிகு கோவலூர் நூறி, நின் அரண் அடு திகிரி ஏந்திய தோளே! வட்கர் போகிய வளரிளம் போந்தை உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு,
புறநானூறு > பாடல்: 99
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக