திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து அருள் உயிர்கள் மால் ஆழி ஆளும் மறித்து. | பாலாழி மீனாளும் பான்மைத் தருளுயிர்கள் மாலாழி யாளு மறித்து. |
| பொருள் : அருளை ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள் அவ் வருளைப் பொருந்தி நின்று பேரின்பத்தை நுகர அறியாமல், மாயையின் காரியமாகிய உலகப் பொருள்களையே நுகர விரும்பி மயக்கமாகிய கடலில் ஆழ்ந்து போய் உள்ளன. இது, பாற்கடலில் உள்ள மீன்கள் அப்பாலை உண்ணும் பொருள் என்று அறியாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும் நிலையைப் போன்றது. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows