திருவருட்பயன் | Thiruvarutpayan

திருவருள் ஒளியைக் காணும் முறை

பதம் பிரித்துஉள்ளபடியே
ஓராதே ஒன்றையும் உற்று உன்னாதே நீ முந்திப்
பாராதே பார்த்ததனைப் பார்.
ஓராதே வொன்றையுமுற் றுன்னாதே நீமுந்திப்
பாராதே பார்த்ததனைப் பார்.
பொருள் : மனம், மொழி, மெய்களின் தொழிற்பாடாகிய முயற்சிகளுள் யாதொன்றையும் உன்னுடையதாகக் கருதாதே. அம் முயற்சியால் விளையும் நலம் தீங்குகளை உன்னுடையனவாகக் கொண்டு அவற்றில் அழுந்தாதே. தற்போதம் நீங்கிய இடத்து வேறற விளங்கி நிற்பதாகிய திருவருளை உனது தற்போதத்தினால் காண முற்படாதே. உன்னறிவில் நிலைத்து நின்று உன்னைக் கண்டு வருவதாகிய அத்திருவருளை மனம் அசைவற நின்று காண்பாயாக.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 58

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026