திருவருட்பயன் | Thiruvarutpayan

அன்பும் இன்பும்

பதம் பிரித்துஉள்ளபடியே
இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம்
அன்பு நிலையே அது.
இன்பி லினிதென்ற லின்றுண்டே லின்றுண்டா
மன்பு நிலையே வது.
பொருள் : இன்பங்கள் எல்லாவற்றிலும் இனிமையுடையது எனச் சிறப்பிக்கப்படும் முத்தியின்பத்தை இப்பிறப்பிலேயே பெறலாம். அதற்கு முன்னே ஆன்மா ஒன்றைப் பெறவேண்டும். அந்த ஒன்று எது எனில், இறைவனிடத்தில் இடையறாது அன்பு செய்து நிற்கும் நிலையேயாகும். இந்த அன்பு நிலை இன்று உண்டானால், பேரின்பமும் இப்பொழுதே உண்டாகும்.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 80

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026