திருவருட்பயன் | Thiruvarutpayan

இரு வகை நடனம்

பதம் பிரித்துஉள்ளபடியே
ஊன நடனம் ஒருபால் ஒரு பாலாம்
ஞான நடனம் தான் நடுவே நாடு.
ஊன நடன மொருபா லொருபாலாம்
ஞானநடனந் தானடுவே நாடு.
பொருள் : சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தில் ஊன நடனத்தைக் குறிக்கும் பொருள்கள் ஒரு பக்கம் சேர்ந்திருக்க, ஞான நடனத்தைச் செய்யும் பொருள்கள் மற்றொரு பக்கம் சேர்ந்திருக்க, அந்நடனங்களால் பயன் அடைகின்ற உயிர் அவ்விரு பொருள்களுக்கும் இடையே நிற்கும். மாணவனே, இதனை ஆராய்ந்து உணர்வாயாக.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 83

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026