திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| விரியமந மேவி யவ்வை மீள விடா சித்தம் பெரிய வினை தீரில் பெறும். | விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம் பெரியவினை தீரிற் பெறும். |
| பொருள் : ஆணவ மலமும், அது காரணமாகத் திரோதான சத்தி, மாயை, கன்மம் ஆகியனவும் உயிரை அழுத்தமாகப் பற்றியுள்ளன. அவை தம்மினின்றும் உயிரை மீண்டு போக விடுவதில்லை. உயிரினது பழவினை முழுதும் கெடுமாயின் உயிர் ஞானம் பெற்று அவற்றினின்றும் மீண்டு சிவத்தை அடையும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows