திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

சேடர்மலி காழிநகர் வேந்தர் தாமும்
 தேவர்புகழ் திருத்தோணிச் சிவனார்பங்கில்
பீடுடைய உமைமுலைப்பால் அருளால்உண்டு
 பிஞ்ஞகனைச் சினவிடைமேல் பெருகக்கண்டு
தோடுடைய செவியன்முதல் கல்லூர் என்னும்
 தொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப்
பாடினார் பதிகங்கள் பாவில் ஒன்றாம்
 பதினாறாயிரம் உளதாப் பகருமன்றே

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 14

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026