திருமுருகாற்றுப்படை | Thirumurgatrupadai |
உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ,
விசும்பஆ றாக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று,
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் . . .130
திருமுருகாற்றுப்படை > 2. திருச்சீர் அலைவாய் > பன்னிரு கைகள்: > பாடல்: 13
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக