277. சிதரினும் பலவே! பாடியவர்: பூங்கணுத்திரையார் திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி மீன்உண் கொக்கின் தூவிஅன்ன வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறுஎறிந்து பட்டனன்’ என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர் நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
புறநானூறு > பாடல்: 277
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக