278. பெரிது உவந்தனளே! பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார் திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி “நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின், முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன்” என்று பலர் கூற, “மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன் முலைஅறுத் திடுவென், யான்’ எனச் சினைஇக், கொண்ட வாளடு படுபிணம் பெயராச், செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!
புறநானூறு > பாடல்: 278
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக