47. புலவரைக் காத்த புலவர்! பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி. திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி. குறிப்பு: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி உய்யக் கொண்ட செய்யுள் இது. வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, ‘நெடிய’ என்னாது சுரம்பல கடந்து, வடியா நாவின் வல்லாங்குப் பாடிப், பெற்றது மகழ்ந்தும், சுற்றம் அருத்தி, ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே; திறம்பட நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் மண்ணாள் செல்வம் எய்திய நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.
புறநானூறு > பாடல்: 47
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக