48. 'கண்டனம்' என நினை! பாடியவர்: பொய்கையார். பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன். திணை: பாடாண். துறை: புலவராற்றுப் படை. கோதை மார்பிற் கோதை யானும், கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும், மாக்கழி மலர்ந்த நெய்த லானும், கள்நா றும்மே, கானல்அம் தொண்டி; அ·துஎம் ஊரே; அவன்எம் இறைவன்; எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல! ‘அமர்மேம் படூஉங் காலை, நின் புகழ்மேம் படுநனைக் கண்டனம்’ எனவே.
புறநானூறு > பாடல்: 48
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக