52. ஊன் விரும்பிய புலி ! பாடியவர்: மருதன் இளநாகனார்; மருதிள நாகனார் என்பதும் பாடம். பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. திணை: வாகை. துறை; அரச வாகை. குறிப்பு; நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி. அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ, முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல், ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத் தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு, வடபுல மன்னர் வாட, அடல் குறித்து, இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி! இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்து யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும் மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங் கொடி வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும், பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில், நரைமூ தாளர் நாயிடக் குழிந்த வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக் கான வாரணம் ஈனும் காடாகி விளியும் நாடுடை யோரே!
புறநானூறு > பாடல்: 52
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக