53. செந்நாவும் சேரன் புகழும்! பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார். பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. திணை: வாகை. துறை: அரசவாகை. குறிப்பு: கைகோத்து ஆடும் தெற்றி யாட்டம் பற்றிய செய்தி. முதிர்வார் இப்பி முத்த வார் மணல், கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து, இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற களங்கொள் யானைக், கடுமான், பொறைய! விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை கைம்முற் றலநின் புகழே, என்றும்; ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து வாழேம் என்றலும் அரிதே; ‘தாழாது செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன் இன்றுளன் ஆயின், நன்றுமன், என்ற நின் ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப் பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே.
புறநானூறு > பாடல்: 53
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக