74. வேந்தனின் உள்ளம்! பாடியவன்: சேரமான் கணைக்கா லிரும்பொறை திணை: பொதுவியல் துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர் குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், ஆள் அன்று என்று வாளின் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம், மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத், தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
புறநானூறு > பாடல்: 74
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக