80. காணாய் இதனை! பாடியவர்: சாத்தந்தையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: தும்பை. துறை: எருமை மறம். இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், மைந்துடைமல்லன் மதவலி முருக்கி, ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால் வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே; நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப் போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம- பசித்துப் பணைமுயலும் யானை போல, இருதலை ஒசிய எற்றிக், களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே.
புறநானூறு > பாடல்: 80
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக