83. இருபாற்பட்ட ஊர்! பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: கைக்கிளை. துறை: பழிச்சுதல். அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன் தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே; அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே; என்போற் பெருவிதுப் புறுக; என்றும் ஒருபால் படாஅது ஆகி இருபாற் பட்ட இம் மையல் ஊரே!
புறநானூறு > பாடல்: 83
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக