89. என்னையும் உளனே! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை : தும்பை. துறை: தானை மறம். இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல், மடவரல், உண்கண், வாள்நதல், விறலி! பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என, வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! எறிகோல் அஞ்சா அரவின் அன்ன சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளி பொரு தெண்கண் கேட்பின், அது போர்! என்னும் என்னையும் உளனே!
புறநானூறு > பாடல்: 89
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக