திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தனக்கு நிழல் இன்றாம் ஒளி கவரும் தம்பம் எனக் கவர நில்லாது இருள். | தனக்கு நிழலின்றா மொளிகவருந் தம்ப மெனக்கவர நில்லா திருள். |
| பொருள் : உச்சிவேளையில் பளிங்குத் தூண் பிற பொருள்களின் நிழல்கள் தன்னிடத்தில் படியாதபடி சூரியவொளி ஒன்றையே கவர்ந்து நிற்கும். அப்பளிங்குத் தூண்போல், உயிர் தன்னிடத்தில் பிற உணர்வுகள் சிறிதும் எழாதபடி திருவருள் ஒன்றையே முழுதுமாகப் பற்றி நிற்குமாயின் மலஇருள் அடியோடு நீங்குவதாகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows