105. தேனாறும் கானாறும்! பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை. சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி! தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப் பெய்யினும், பெய்யா தாயினும், அருவி கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட, மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும் நீரினும் இனிய சாயல் பாரி வேள்பால் பாடினை செலினே.
புறநானூறு > பாடல்: 105
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக