264. இன்றும் வருங்கொல்! பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார் திணை: கரந்தை துறை: கையறுநிலை பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி, மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியடு, அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து இனிநட் டனரே! கல்லும் ; கன்றொடு கறவை தந்து பகைவர் ஓட்டிய நெடுந்தகை கழிந்தமை அறியாது இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?
புறநானூறு > பாடல்: 264
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக