முல்லை - தலைவி கூற்று
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே.
-பரணர்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 24
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக