மருதம் - தோழி கூற்று
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே.
-கோப்பெருஞ் சோழன்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 53
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக