திருமந்திரம் | Thirumanthiram

தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரமது ஆமே. 4

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம்) > பாடல்: 1756

Upon the heavenly letters five times ten
Well may you behold the self-illumined Light (Aum);
That which thus arises with His Sakti (U)
Like a golden vine that blooms pretty
Is but He that is Ahara (A)--the Support Finite.

பொன்னால் இயன்ற, பூவொடு கூடிய கொடிபோலும் சத்தியுடன் சிவன் ஆன்ம சிற்சத்தியை நேரே பற்றி அதற்குப் பொருள் தருகின்ற நாதமே தன் வடிவாகக் கொண்டு ஆன் மாவின் உணர்வில் விளங்குவான். அதனால் அந்த நாதத்தின் காரிய மாய் ஆகாயத்தின் ஒலியால் விளங்கி நிற்கின்ற ஐம்பது எழுத்துக் களும் பொருந்தியுள்ள இடத்தில் அடியவன் அடியார்களுக்கு நேரே விளங்கி நிற்கும் சிவசோதியைக் காண இயலும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, May 28, 2026